ஆசியா

சீனாவில் இடிந்து விழுந்த ரயில்வே கட்டுமானத் தளம் ; 13 தொழிலாளர்கள் மாயம்

சீனாவின் தென்பகுதி நகரான ஷென்சென்னில் ரயில்பாதைக் கட்டுமானத் தளம் இடிந்து விழுந்ததில் 13 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷென்சென் – ஜியாங்மென் ரயில்வே கட்டுமானத் தளத்தில் புதன்கிழமை (டிசம்பர் 4) இரவு 11 மணியளவில் திடீரென்று நிலப்பகுதி சரிந்ததாகக் கூறப்பட்டது.

வியாழக்கிழமை காலை தேடல், மீட்புப் பணிகள் தொடங்கின.மண் சரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெறுவதாக அதிகாரிகள் கூறினர்.

அந்தப் பகுதிக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் வெளியேற்றியதாக நெருக்கடி நிர்வாக அமைப்பு தெரிவித்தது.

அந்தக் கட்டுமானத் தளத்திற்கு அருகே உள்ள முக்கிய விரைவுச்சாலைகள், மீட்புப் பணிக்காக மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஷென்சென் – ஜியாங்மென் ரயில்பாதைக்கான கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்றன

(Visited 47 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்