புதுவித அரசியல் ஆட்டத்தில் சின்னம்மா?
” தமிழக சட்டசபைத் தேர்தலில் எனது தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சியை அமைப்போம்.” என்று முன்னாள் முதல்வர் ஜெயலாலிதாவின் நெருங்கிய சகாவான சசிகலா Sasikala, தெரிவித்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று (03) அஞ்சலி செலுத்தினார்.
துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என இதன்போது அவரது ஆதரவாளர்கள் உறுதி எடுத்தனர்.
இது பற்றி சசிகலாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,
“எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இது பற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை.
சட்டசபைத் எனது தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சியை அமைப்போம். அது எப்படி நடக்கும் என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள்.” என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது பற்றிய எழுப்பட்ட கேள்விக்கு,
“ ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு முடிவு இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு இருப்பார்கள். அது பற்றி எல்லாம் எப்படி கருத்து தெரிவிக்க முடியும்.” என பதிலளித்தார்.
அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவை அம்மா எனவும், அவரது மறைவின் பின்னர் சசிகலாவை சின்னம்மா எனவும் விளித்தனர்.





