ஆசியா செய்தி

ஆறு மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி குழு

ஆறு மாத காலம் Tiangong விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்த சீனாவின் 3 விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமி திரும்பியுள்ளனர்.

அவர்களை ஏற்றியிருந்த Shenzhou விண்கலம், மங்கோலியாவின் உட்புறப் பகுதியில் Dongfeng தளத்தில் தரையிறங்கியது.

Ye Guangfu, Li Cong, Li Guangsu ஆகிய மூவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் Xi Jinping தலைமையில் தனது விண்வெளிக் கனவை நனவாக்கும் முயற்சியில் சீனா அதி தீவிரமாக உள்ளது.

அதற்கு முன்னோட்டமாகத் தான் Tiangong விண்வெளி நிலையைத்தை அமைத்து, ஒவ்வொரு மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மூவரடங்கிய விண்வெளி வீரர்கள் குழுவை சீனா சுழல் முறையில் அனுப்பி வருகிறது.

2030ம் ஆண்டுக்குள் நிலாவுக்கு ஒரு குழுவை அனுப்பும் திட்டத்திலிருக்கும் பெய்ஜிங், நிலவின் மேற்பரப்பில் ஒரு தளத்தை உருவாக்க விரும்புகிறது.

(Visited 40 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி