இலங்கை

சீன கப்பல்களை இலங்கையில் நிறுத்திவைக்க ஒருவருட காலத்திற்கு தடை!

எந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும் அதன் துறைமுகங்களில் நிறுத்திவைக்கவோ அல்லது அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) ஒரு வருட காலத்திற்கு செயல்படவோ அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 21, 2023 அன்று நடைபெற்ற  சந்திப்பின் போது, இந்திய மூலோபாய மற்றும் பாதுகாப்புக் கவலைகளுக்கு மதிப்பளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஜனவரி 5, 2024 முதல் மே இறுதி வரை தென் இந்தியப் பெருங்கடலில் “ஆழ்ந்த நீர் ஆய்வு” நடத்த திட்டமிடப்பட்ட சீன அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang Hong 3 இற்கு  இலங்கை அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்படாது என செய்திகள் வெளியாகியுள்ளன.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!