10 பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சீன நபர் – லண்டனில் சிறைதண்டனை!

லண்டன் மற்றும் சீனாவில் 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து போதைப்பொருள் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பிஎச்டி மாணவருக்கு குறைந்தபட்சம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டவரான ஜென்ஹாவோ ஜூ, செப்டம்பர் 2019 முதல் மே 2023 வரை லண்டனில் மூன்று பெண்களையும் சீனாவில் மேலும் ஏழு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்த நிலையில் அவர்கள் சுய நினைவை இழந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதுடன், அவர்களின் உடமைகளையும் எடுத்துள்ளார்.
அத்துடன் 09 பேரை வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட 10 பேரில் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டதாக வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்,
ஆனால் பெருநகர காவல்துறை துப்பறியும் நபர்கள் அவர் டஜன் கணக்கான பெண்களை குறிவைத்திருக்கலாம் என்று அஞ்சுகின்றனர். விசாரணைக்குப் பிறகு, மேலும் 24 பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு 24 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.