இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ சீனாவின் உதவியும் தொடர்கிறது!

பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகள், பாலங்கள், தொடருந்து உள்ளிட்ட, உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனா உதவும் என நம்பப்படுகின்றது.

வெளிநாட்டு நாடுகளுடனான சீன மக்கள்நட்புறவு சங்கத்தின் தலைவர் யாங் வான்மிங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை கொழும்பில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியது.

இதன்போது, பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் தொடர்ந்து ஆதரவளிப்பதாக யாங் வான்மிங் உறுதியளித்தார்.

இலங்கை உடனான சீனாவின் நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு நாடுகளுடனான சீன மக்கள்நட்புறவு சங்கத்தின் சார்பில், சுமார் 82 ஆயிரம் டொலர் கொடையையும், அவர் வழங்கினார்.

டித்வா சூறாவளி உள்ளிட்ட அவசரகாலங்களின் போதான சீனாவின் தொடர்ச்சியான உதவிக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்தியாவும் சகல வழிகளிலும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!