ஆசியா

திபெத்தில் உலகிலேயே மிக பெரிய நீர் மின் நிலைய அணைக்கட்டைக் கட்டும் சீனா

உலகிலேயே ஆகப் பெரிய நீர் மின் நிலைய அணைக்கட்டைச் சீனா கட்ட இருக்கிறது.இந்த அணைக்கட்டு திபெத்தின் கிழக்குப் பகுதியில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு இந்தியா மற்றும் பங்ளாதேஷைச் சேர்ந்த மில்லியன்கணக்கானோரைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

அணைக்கட்டுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்க சீன அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

யார்லுங் சாங்போ ஆற்றில் இந்த நீர் மின் நிலைய அணைக்கட்டு கட்டப்படும் என்றும் ஆண்டுக்கு அது மணிக்கு 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடும் என்று சீனாவின் மின் ஆலை கட்டுமானத்துறை தெரிவித்தது.

தற்போது சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள உலகின் ஆகப் பெரிய நீர் மின் நிலைய அணைக்கட்டு தயாரிக்கும் மின்சாரத்தைவிட இது மும்மடங்கும் அதிகம்.

(Visited 19 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!