மியன்மாரில் மோசடி மையங்களை நடத்திய நால்வரை தூக்கிலிட்ட சீனா!
மியான்மரில் மோசடி மையங்களை நடத்திய நால்வரை தூக்கிலிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய அவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக மியன்மாரின் எல்லை பகுதிகளில் மாஃபியா கும்பல்கள் அல்லது பிரபல குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அங்கு அவர்கள் கேசினோக்கள், சிவப்பு விளக்கு மாவட்டங்கள் மற்றும் சைபர்ஸ்கேம் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இந்நிலையில் குறித்த நபர்களை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். அவர்கள் மீது கொலை, மற்றும் காயங்கள் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர்களால் சீனாவில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார். பலர் காயமடைந்தனர். இதனை குறிப்பிட்ட நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





