இலங்கை செய்தி

எங்கள் குடும்பத்தின் மீது சனல் 4விற்கு கடும் கோபம் இருக்கின்றது!!! நாமல் எம்.பி

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து சனல் 4 ராஜபக்ஷக்களுடன் வரலாற்றுப் போட்டியைக் கொண்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 வெளியிட்ட காணொளி நம்பகத்தன்மை இருந்தால் ஏன் அதனை தமது இணையத்தளத்திலிருந்து நீக்கியது என பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றில் இன்று பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சனல் 4 இன் சமீபத்திய காணொளி, பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக ராஜபக்சக்களை பழிவாங்கும் மற்றொரு முயற்சியாக இருக்கலாம் அல்லது ஒருவரின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றும் முயற்சியாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

2009ஆம் ஆண்டு போரை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், சனல் 4 ஆனது எனது குடும்பம், எனது தந்தை மற்றும் ராஜபக்சவின் பெயர் மீது வரலாற்று ரீதியாக வெறுப்பைக் கொண்டுள்ளது.

அதன் பின்னர் ராஜபக்சேவுக்கு எதிராக வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. “நான் சனல் 4 ஐ ஊடக நிறுவனமாக பார்க்கவில்லை, வீடியோ தயாரிப்பு நிறுவனமாக பார்க்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content