இலங்கையில் வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் வாகனங்களின் விலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சமூகப் பாதுகாப்பு வரியால் இவ்வாறு விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் சுமார் 250,000 ரூபாய் அல்லது இரண்டரை சதவீதம் அதிகரிக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, நாட்டின் நிதி இலக்குகள் அடையப்பட்டதற்கு, எதிர்பாராத வகையில் நிகழ்ந்த வாகன இறக்குமதியே முதன்மையான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் இத்தகைய எண்ணிக்கையிலான வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், இதுவே அரசாங்கத்திற்கு வருமானத்தைத் தந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்களும் இதனை எதிர்பார்க்கவில்லை, எங்களுடைய கணிப்பு தவறாகிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என ஹர்ஷ டி சில்வா கூறினார்.




