அரசியல் இலங்கை செய்தி

சாணக்கியன் இனவாதி: அக்மீமன தேரர் குற்றச்சாட்டு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இனவாதியென முத்திரைக் குத்தியுள்ளார் லங்கா மக்கள் கட்சி தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் Akmeemana Dayarathana Thero.

கொழும்பில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு முத்திரை குத்தினார்.

யாழில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போது ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு தென்னிலங்கையில் கடும்போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எனினும், ஜனாதிபதியின் மேற்படி உரையை நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி. நேற்று வரவேற்றார்.

இந்நிலையிலேயே அக்மீமன தயாரத்ன தேரர், சாணக்கியனுக்கு இனவாத முத்திரை குத்தியுள்ளார்.

“ சாணக்கியன் போன்ற இனவாதிகளுக்கு தேவையான உரையை ஜனாதிபதி நிகழ்த்தியுள்ளார்.அதனால்தான் சாணக்கியன் அதனை நியாயப்படுத்தியுள்ளார்.

போர் காலத்தில் சாணக்கியன், சம்பந்தன் போன்றவர்கள் கொழும்பிலேயே இருந்தனர்.” – எனவும் தேரர் குறிப்பிட்டார்.

யாழில் அநுர ஆற்றிய உரை சரியானதே: சாணக்கியன் சான்று!

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!