இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

கொழும்பில் சாரதிகளை சுற்றிவளைக்கும் CCTV கமராக்கள் – பொலிஸார் எச்சரிக்கை

கொழும்பில் விதிகளை மீறிய 4000க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரை சூழ பொருத்தப்பட்டுள்ள CCTV கமராக்களின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்ட போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் கொழும்பின் பல பகுதிகளில் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை CCTV கமராக்கள் ஊடாக கண்டறியும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 724 வாகன விபத்துக்களில் 764 பேர் உயிரிழந்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!