இலங்கை செய்தி

பெற்றோரின் உரிமைகளைப் பறிக்கும் கல்விச் சீர்திருத்தம்”: கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடும் எச்சரிக்கை

“பாடசாலைப் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள புதிய சீர்திருத்தங்கள், பெற்றோரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல புனித சூசையப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், 6 வயது முதல் மாணவர்களுக்குப் போதிக்கப்படவுள்ள இந்த புதிய பாடத்திட்டம், மேற்கத்தைய நாடுகளின் கலாசாரச் சீரழிவுகளைத் திணிப்பதாகக் குற்றம் சாட்டினார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சில சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவிக்காக இலங்கையின் பாரம்பரிய கலாசார விழுமியங்களை அரசாங்கம் அடகு வைக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் என்ற பெயரில் பிள்ளைகளைப் பெற்றோருக்கு எதிராகத் தூண்டிவிடும் இத்தகைய கல்வி முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்திய பேராயர், அரசாங்கம் தனது அதிகார வரம்பிற்குள் மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் எச்சரித்தார்.”

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!