லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாதக் குழுவாக அறிவித்த கனடா
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கும்பலை கனடா தனது குற்றவியல் சட்டத்தின் கீழ் ‘பயங்கரவாத அமைப்பு’ என்று அறிவித்துள்ளது.
இதன் பொருள், அந்த நாட்டில் உள்ள எந்தவொரு பிஷ்னோய் கும்பலின் சொத்தும், பணம் முதல் வாகனங்கள் முடக்கப்படலாம் அல்லது பறிமுதல் செய்யப்படலாம்.
மேலும், சந்தேகிக்கப்படும் கும்பல் உறுப்பினர்கள் கனடாவிற்குள் நுழைவதை குடிவரவு அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்க முடியும்.
“குறிப்பிட்ட சமூகங்களை குறிவைத்து பயம் மற்றும் அச்சுறுத்தல் சூழலை உருவாக்குபவர்களுக்கும் வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்கும் கனடாவில் இடமில்லை ” என்று அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய சட்டத்தின் கீழ், கனேடிய குடிமகனும், வெளிநாட்டில் உள்ளவர்களும், பிஷ்னோய் கும்பலுக்குச் சொந்தமான அல்லது கட்டுப்படுத்தப்படும் சொத்துக்களை தெரிந்தே கையாள்வது இப்போது ஒரு குற்றமாகும்.





