க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை தொடர்பான சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்ள அழையுங்கள்!
நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை விடைத்தாள்கள் சேதமடையவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பொதுமக்கள் திணைக்களத்தின் ஹாட்லைனை 1911 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லது 0112 78 45 37, 0112 78 66 16, 0112 78 42 08 என்ற தொலைபேசி எண்கள் மூலம் தெரிவிக்கலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற விஷயங்களை 0112 78 44 22 என்ற தொலைநகல் மூலமாகவோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் மின்னஞ்சல் முகவரியான http://gcealexam@gmail.com மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.





