ஐரோப்பா

05 நாட்களுக்கு மூடப்படும் பரபரப்பான ரயில் நிலையம் – இங்கிலாந்து பயணிகளின் கவனத்திற்கு!

இங்கிலாந்தின் மிகவும் பரபரப்பான லண்டன் லிவர்பூல் ரயில் நிலையம் மார்ச் மாதத்தில் 05 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொறியியல் பணிகளுக்காக குறித்த ரயில் நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி, மார்ச் மாதம் 15, 21, 22, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ரயில் நிலையம் மூடப்படும் என்றும் வார இறுதி நாட்களில் பயணிகள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேட்டர் ஆங்கிலியா (Greater Anglia), சி2சி (c2c), எலிசபெத் (Elizabeth) பாதை மற்றும் லண்டன் தரைவழி சேவைகளைப் பாதிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வழித்தடங்களுக்கு மாற்று பேருந்துகள் வழங்கப்படும் என்றும் பயணிகள் பயணம் செய்வதற்கு முன் தேசிய ரயில் அல்லது ரயில் ஆபரேட்டர் வலைத்தளங்களை பார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!