இந்தியா செய்தி

உத்தரப்பிரதேசத்தில் பேருந்து விபத்து – பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு

சிகிச்சை பலனின்றி இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து நேற்று நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹத்ராஸில் 11 பேர் மற்றும் அலிகாரில் 5 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர் என்று ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட் ஆஷிஷ் குமார் தெரிவித்தார்.

2 வயது அபி மற்றும் 12 வயது குல்ஷன் ஆகியோர் அலிகாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் மற்றும் வேனில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 15 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

“ஆக்ரா-அலிகார் தேசிய நெடுஞ்சாலையில் வேனை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து மோதியது” என்று காவல்துறை கண்காணிப்பாளர் (SP) நிபுன் அகர்வால் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!