Site icon Tamil News

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு இடியாக வந்த கருத்து கணிப்பு : ஆட்சி பறிபோகும் அபாயம்!!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி அடுத்த தேர்தலில் 98 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

அதேவேளை எதிர்கட்சியாக உள்ள தொழிற் கட்சி மகத்தான வெற்றிகளை பெறும் எனவும் அந்த கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் சர்வேஷன் என்ற ஏஜென்சி நடத்திய கருத்துக் கணிப்பில்  15000 வாக்காளர்கள் பங்கேற்று தமது முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

கணிப்பின்படி லேபர் கட்சியின் 468 தொகுதிகளுடன் ஒப்பிடும்போது, சுனக்கின் ஆளும் கட்சி வெறும் 98 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி ஒட்டுமொத்த வாக்குகளில் 45 சதவிகிதத்தை பெற்று டோரிகளை விட 19 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.

வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில், கன்சர்வேடிவ் கட்சி ஒரு முழுமையான தோல்வியைக் காணும் என்றும் எந்த இடங்களையும் வெல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து தேசிய கட்சி 41 இடங்களையும், லிபரல் டெமாக்ராட் கட்சி 22 இடங்களையும், ப்ளைட் சிம்ரு 2 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் தலைமை நிர்வாகிக்கான பெஸ்ட் நவோமி ஸ்மித், இது ஒரு மாற்றத் தேர்தலாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2019ல் கன்சர்வேடிவ் கட்சிக்கு 365 இடங்களும், லேபர் கட்சிக்கு 203 இடங்களும், எஸ்என்பி கட்சிக்கு 48 இடங்களும், லிப் டெம்ஸ் 11 இடங்களும், பிளேட் 4 இடங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version