இந்தியா

இந்தியாவில் திறக்கப்படும் பிரித்தானியாவின் கிளைப் பல்கலைக்கழகங்கள்!

வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது மற்றும் நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவது குறித்து இந்தியா மற்றும் பிரித்தானிய பிரதமர்களுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

இதன்போது டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, முக்கியமான கனிமங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மை உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான முக்கியமான அடித்தளமாக மாறி வருவதாக தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் இராணுவ பயிற்சி ஒத்துழைப்பு குறித்து ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதேநேரம் பிரித்தானியாவை தளமாக கொண்ட 09 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தனது கிளையை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் 34 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் என்றும், இந்தியாவிற்கான ஏற்றுமதியை கிட்டத்தட்ட 60% அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!