ஐரோப்பா செய்தி

பிரான்சில் பாலம் இடிந்து விழுந்து விபத்து!! தமிழர் ஒருவர் பலி

பிரான்ஸ் துளூஸ் (toulouse) நகருக்கு அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ரயில் பாலம்  இடிந்து வீழ்ந்ததில் தமிழ் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாரிஸ் புறநகரில் வசிக்கும் 55 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இதில் மேலும் மூவர் காயமடைந்துள்ள நிலையில் இருவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் வழித்தட விஸ்தரிப்புக்காக Labège என்ற இடத்தில் நிறுவப்பட்டு வந்த கொங்கிறீட் பாலத்தின் தளப் பகுதி திடீரென வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

பாலம் தகர்ந்த சமயத்தில் அவர்கள் பத்து மீற்றர்கள் உயரத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தின் ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!