உலகம்

அமெரிக்காவில் எல்லை முகவர்களின் அட்டகாசம் – மேலும் இருவர் மீது துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவின் மினியாபோலிஸில் (Minneapolis) கூட்டாட்சி முகவர் ஒருவர் பெண் ஒருவரை சுட்டுக் கொலை செய்த பிறகு நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் ஓரிகானின் போர்ட்லேண்டில் (Portland) எல்லை ரோந்து முகவர்கள் மேலும் இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்லையில் சோதனையில் ஈடுபட்ட முகவர்கள்   வாகனம் ஒன்றை நிறுத்தும்படி உத்தரவிட்டதாகவும், அவர்கள் தொடர்ந்து செல்ல முற்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், சட்ட அமலாக்கப் பிரிவினர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

மேற்படி துப்பாக்கிச்சூட்டில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ட்ரம்ப் முன்னெடுத்துள்ள கடுமையான குடியேற்ற கொள்கைகளால் இடம்பெறும் இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!