இந்தியா செய்தி

டெல்லியில் தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.

அந்த வகையில் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் மற்றும் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் பிரபல தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

‘தாஜ் ஹோட்டலில் உள்ள விருந்தினர்கள் அனைவரும் கடவுளிடம் அனுப்பப்படுவார்கள்’ என்ற வாசகத்துடன் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து ஹோட்டலில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி