ஐரோப்பா

பிரித்தானியாவில் நாய்களை கவனிக்க 100000 பவுண்ட் சம்பளம் – நூற்று கணக்கானோர் விண்ணப்பம்

பிரித்தானியாவில் ஒரு லட்சம் பவுண்ட் சம்பளத்தில் வேலைவாய்ப்பிற்கு 400 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் உள்ள ஒரு பணக்கார குடும்பம் தங்களது வளர்ப்பு பிராணிகளை கவனித்துக்கொள்ள இந்த சம்பளத்துடன் வேலை வாய்ப்பை அறித்துள்ளது.

குறித்த பணக்கார குடும்பம், தங்களது செல்லப்பிராணிகளை கவனித்துக்கொள்ளும் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அவர்களது இரு வளர்ப்பு நாய்களை பராமரிக்க ஒரு லட்சம் பவுண்ட் சம்பளத்துடன் வேலை வழங்கவுள்ளதாக அறிவித்தள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுப் பொருட்களை கவனித்தால், கால்நடை மருத்துவருடன் சந்திப்புகள் திட்டமிடல் போன்றவை, மாலை மற்றும் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்கள் உட்பட எந்த நேரம் அழைத்தாலும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஆறு வாரங்கள் விடுமுறை உண்டு எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாய்களின் மன, உடல் நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யக்கூடிய திறன்பெற்ற பணியாளர் வேண்டும் என்று அந்தக் கோடீஸ்வரக் குடும்பம் நியமித்துள்ள நிறுவனம் கூறியது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content