உலகம் செய்தி

ரியாத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மிகப்பெரிய திருமண நிகழ்வு

டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் ரியாத்தில்(Riyadh) உள்ள என்சான்(Ensan) அறக்கட்டளையின் ஆதரவின் கீழ் மொத்தம் 282 ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

ரியாத் ஆளுநர் இளவரசர் பைசல் பின் அப்துல்அஜிஸ்(Faisal bin Abdulaziz) மற்றும் அவரது மனைவி இளவரசி நூரா பின்த் முகமது(Noura bint Mohammed) ஆகியோரின் தலைமையில் அடுத்த வாரம் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

பயனாளிகள் நிலையான குடும்பங்களை கட்டியெழுப்ப உதவும் தொண்டு நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது என்று அமைப்பின் இயக்குநர் ஜெனரல் முகமது பின் சாத் அல்-முஹாரிப்(Mohammed bin Saad Al-Muharib) குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு, இந்த அமைப்பு வீட்டு பொருளாதாரம் மற்றும் குழந்தை வளர்ப்பு உட்பட பல்வேறு பயிற்சி படிப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!