ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த வங்கதேசம்

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வங்கதேசம் “கடுமையாகக் கண்டித்துள்ளது” என்று தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சகம் X இல் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக அப்பாவி மக்கள் துயரமாக உயிரிழந்ததை வங்கதேசம் கடுமையாகக் கண்டிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வங்கதேசம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது, மேலும் இந்த அர்த்தமற்ற வன்முறைச் செயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் வங்கதேசம் தனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைக்குப் பிறகு, பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ், பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழப்புக்கு “தனது இரங்கலைத் தெரிவித்தார்”.