இலங்கை

கொழும்பில் கட்டிடத்தின் கூரையில் இருந்து எரிவாயு தோட்டாக்கள் அடங்கிய பை கண்டெடுப்பு

போராட்டங்களின்போது கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 எரிவாயு தோட்டாக்கள் கொண்ட ஒரு பையொன்று கொழும்பு 7, ப்ளவர் பாதையிலுள்ள கொமன் கொபி ஹவுஸ் (Common Coffee House) கட்டிடத்தின் கூரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக கறுவாத்தோட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கறுவாத்தோட்ட காவல்துறைக்கு கிடைத்த தகவலினடிப்படையில் குறித்த எரிவாயு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினரால் கொண்டு வரப்பட்ட எரிவாயு தோட்டாக்கள் போராட்டக்காரர்களால் கட்டிடத்திலேயே விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தலைமை காவல்் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்