லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டத்தில் பத்திரிகையாளர் மீது தாக்குதல் – ஆஸ்திரேலிய பிரதமர் கண்டனம்

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த அமைதியின்மையை செய்தியாக்கிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிருபர் மீது ரப்பர் தோட்டாவால் “கொடூரமான” துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை ஆஸ்திரேலிய பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேரடி தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டபோது ஆஸ்திரேலிய நிருபர் லாரன் டோமாசியின் காலில் ரப்பர் தோட்டா தாக்கியது. அவர் வலியால் துடித்தாலும் காயமின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவர் நலமாக இருக்கிறார். ஆனால் அந்த காட்சிகள் பயங்கரமானவை” என்று டோமாசியிடம் பேசிய பிறகு அல்பானீஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அல்பானீஸ் தனது அரசாங்கம் இந்த சம்பவத்தை அமெரிக்க நிர்வாகத்திடம் எழுப்பியதாகவும், ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் எதிர்காலத்தில் எந்த விவாதம் குறித்தும் கருத்து தெரிவிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.