ஆஸ்திரேலியா

இனப்படுகொலை செய்ததாக பிரிட்டிஷ் மன்னருக்கு எதிராகக் குரலெழுப்பிய ஆஸ்திரேலிய MP

பிரிட்டிஷ் மன்னர் ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவர் சிறப்புரை ஆற்றியதை அடுத்து, அவருக்கு எதிராக சுயேச்சை MP ஒருவர் குரல் எழுப்பினார்.

“நீங்கள் எனது மன்னர் அல்ல,” என்று ஆஸ்திரேலிய பழங்குடியினரான லிடியா தோர்ப் உரக்க கத்தினார்.கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கு அவர் கத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியப் பழங்குடியினரைப் பிரிட்டிஷ் அரச குடும்பம் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சுமத்திய தோர்ப், ஆஸ்திரேலியா மன்னர் சார்ல்சின் நிலம் இல்லை என்று கூறினார்.

தோர்ப்பைப் பாதுகாவல் அதிகாரிகள் ஒருவழியாக அங்கிருந்து கொண்டு சென்றனர்.

அதன் பிறகு, மன்னர் சார்ல்சும் அரசியார் கமிலாவும் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோரைச் சந்தித்தனர்.

(Visited 40 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித