ஆஸ்திரேலியா

ஐந்தாவது கொவிட் அலையை எதிர்கொள்ளும் அவுஸ்ரேலியா : மக்களுக்கு எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் கொவிட்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்ற நிலையில் தடுப்பூசி குறித்து மக்கள் அலட்சியமாக இருக்ககூடாது என அந்நாட்டின் மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதன்படி ஆறுமாதங்களில் 16. 5 மில்லியன் மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய மருத்துவசபை கரிசனைக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

அவுஸ்ரேலியா தற்போது ஐந்தாவது கொவிட் அலையை எதிர்கொள்கிறது. நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த மார்ச்சில் காணப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது அலட்சியமாகயிருப்பதற்கான தருணம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பூஸ்டர்களை செலுத்திக்கொள்ளவேண்டு;ம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!