ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – குடும்பத்தாரை காண புறப்பட்டு விமானத்திலேயே உயிரிழந்த இந்திய வம்சாவளி இளம்பெண்

இந்தியாவிலுள்ள தம் குடும்பத்தினரைக் காண்பதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் கிளம்பிய இந்திய இளம்பெண் ஒருவர், விமானத்திலேயே இறந்துபோனார்.கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

மன்பிரீத் கவுர், 24, என்ற அந்த இளம்பெண், கடந்த நாலாண்டுகளில் முதன்முறையாகத் தமது குடும்பத்தினரைக் காணும் நோக்கில் மெல்பர்ன் நகரிலிருந்து குவான்டாஸ் விமானம் வழியாக டெல்லிக்குக் கிளம்பினார்.ஆனால், விமானத்தில் ஏறியதும் இருக்கைவார் அணியவே மன்பிரீத் சிரமப்பட்டதாகவும் விமானம் கிளம்புவதற்குமுன் இருக்கைக்கு முன்னாலேயே விழுந்து, அங்கேயே இறந்துவிட்டதாகவும் குர்தீப் சிங் கிரேவால் என்ற அவருடைய நண்பர் தெரிவித்தார்.

விமான நிலையம் செல்வதற்கு முன்பே மன்பிரீத்திற்கு உடல்நலம் சரியில்லை என்றும் ஆனாலும் எப்படியோ அவர் விமான நிலையத்தைச் சென்றடைந்தார் என்றும் குர்தீப் கூறினார்.

விமான ஊழியர்களும் அவசர சேவைப் பணியாளர்களும் மன்பிரீத்திற்கு உதவ முயன்றதாக குவான்டாஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மன்பிரீத் ஆஸ்திரேலிய அஞ்சல்துறையில் பணியாற்றி வந்தார் என்றும் அவருக்குச் சமையல் வல்லுநராக ஆசை என்றும் அவருடைய அறைத்தோழி கூறினார்.

இதனிடையே, மன்பிரீத்தின் குடும்பத்திற்கு உதவும் நோக்கில் ‘கோஃபண்ட்மி’ எனும் பொது நிதிதிரட்டு தளம் மூலமாக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் குர்தீப்.

“மன்பிரீத் கவுருக்காக நிதி திரட்டி வருகிறேன். எனது கிராமத்தைச் சேர்ந்த மாணவியான அவர், சொந்த ஊருக்குச் செல்லவிருந்தார். ஆனாலும், மெல்பர்ன் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படத் தயாரான நிலையில், விமானத்திலேயே இறந்துவிட்டார்,” என்று குர்தீப் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மன்பிரீத்தின் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை விக்டோரியா மாநிலக் காவல்துறை தயாரித்து வருவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content