ஆசியா

தாக்குதல் நடத்தினால் கடும் விளைவு ஏற்படும் ; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் உள்ள எல்லையில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் கூறும்போது, “பயங்கரவாதத்திற்கு எதிராக புதிதாக தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கையின் கீழ், ஆப்கானிஸ்தானில் உள்ள உள்ள தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத குழு புகலிடங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்குதல் நடத்தும்” என்றார்.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை கூறும்போது, `ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மையை மீறும் சாத்தியம் குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரியின் சமீபத்திய அறிக்கை விவேகமற்றது.

முக்கியமான விஷயங்களில் இதுபோன்ற உணர்ச்சிகரமான அறிக்கைகளை வெளியிடுவதை பாகிஸ்தான் தலைமை தவிர்க்க வேண்டும்.எங்கள் எல்லைக்குள் ஊடுருவும் எந்தவொரு ஆக்கிரமிப்பும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

(Visited 27 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்