ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்கா தரப்பில் மூவர் பலி!
ஈரான் மீதான தாக்குதலில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அத்துடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பில் அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் பலர் சிறிய அளவிலான காயங்கள் மற்றும் மூளையதிர்ச்சிகளுக்கு ஆளானார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் பணிக்குத் திரும்பும் பணியில் உள்ளனர். முக்கிய போர் நடவடிக்கைகள் தொடர்கின்றன, எங்கள் பதிலடி முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
“நிலைமை சீரற்றதாக உள்ளது, எனவே குடும்பங்களுக்கு மரியாதை நிமித்தமாக, எங்கள் வீரமரணம் அடைந்த வீரர்களின் அடையாளங்கள் உட்பட கூடுதல் தகவல்களை, தற்போதைக்கு வெளியிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




