எத்தியோப்பியாவில் மண்சரிவில் சிக்குண்டு 64 பேர் பலி – மேலும் பலர் புதையுண்டதாக தகவல்
தெற்கு எத்தியோப்பியாவின் காமோ (Gamo) வலையத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்குண்டு 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 128 பேர் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சேற்றில் புதைந்து கிடந்ததாகவும், பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை இன்னும் தெளிவாக
அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மக்கள் இதுதொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





