மத்தியப் பிரதேசத்தில் சாட் உணவு கடையில் சிலிண்டர் வெடித்ததில் 40 பேர் காயமடைந்தனர்

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள சாட் உணவு கடையில் சிலிண்டர் வெடித்ததில் 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“கடையில் சிறிய அளவிலான சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்கான செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்கும்.சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.” என்று அதிகாரி மிலிந்த் குமார் நாக்தேவ் தெரிவித்தார்.
தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.பி.குப்தா, 23 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர், சில நோயாளிகளுக்கு 40 சதவீத காயங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் அவர்களில் எவரது நிலையும் மோசமாக இல்லை என குறிப்பிட்டார்.
(Visited 15 times, 1 visits today)