இலங்கை செய்தி

நடுக்கடலில் நடந்த வாக்குவாதம் – மீனவரை குத்தி கொலை செய்த நபர்

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பல நாள் மீன்பிடி கப்பலில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் குழுவில் இருந்த நபர் ஒருவர் மற்றுமொரு மீனவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

மிதித்த சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது படகில் இருந்த ஏனைய மீனவர்கள் கொலை செய்த மீனவரை கட்டிப்போட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

‘சஹான் சோன்’ என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கடந்த 09ஆம் திகதி 05 மீனவர்களுடன்  கடலுக்கு சென்றுள்ளது.

சுமார் 180 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் உறங்கிக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் மற்றொரு மீனவர் செய்த தவறினால் கால் மிதித்துள்ளார்.

அப்போது தூங்கிக் கொண்டிருந்த மீனவர் எழுந்து கூரிய ஆயுதத்தால் மிதித்த மீனவரின் வயிற்றில் தாக்கியதாக  பொலிஸார தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், தாக்குதல் நடத்தியவர் ஏனைய மீனவர்களையும் தாக்குவதாக எச்சரித்துள்ளார்.

அதன்போது, ​​சம்பந்தப்பட்ட குழுவினர் ஒன்றிணைந்து கொலை செய்ததாக கூறப்படும்  மீனவரைப் பிடித்து கட்டி வைத்து இன்று  கரைக்கு  அழைத்து வந்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், குறித்த படகு இன்று கரையை வந்தடைந்துள்ளது.

இதன்படி பேருவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் சுமார் ஒன்றரை நாட்களாக கட்டி வைக்கப்பட்டிருந்ததாலும், சண்டையின் காரணமாக காயமடைந்ததாலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உறங்கிக் கொண்டிருந்த போது காலால் மிதித்ததால் ஏற்பட்ட திடீர் ஆத்திரம் காரணமாக கொலையை செய்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பேருவளை ரொக்லண்ட்வத்தை பகுதியைச் சேர்ந்த உபுல் சாந்த பெர்னாண்டோ என்ற 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content