ஆசியா

பாலியல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸின் பிரபல பாதிரியார் அப்போலோ குயிபோலா கைது!

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிலிப்பைன்ஸ் நாட்டின்பிரபல பாதிரியார் அப்போலோ குயிபோலாயை, ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே பொலிகஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ நகரில் உள்ளது ‘தி கிங்டம் ஆப் ஜீசஸ் கிரைஸ்ட்’ தேவாலயம். 74 ஏக்கர் பரப்பளவில் கல்லூரி மற்றும் ஆடிட்டோரியத்துடன் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு பாதிரியாராக இருப்பவர் அப்போலோ குயிபோலாய். இந்ததேவாலயத்துக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள், இவரின்தீவிர ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். இவர் தன்னை இந்த பிரபஞ்சத்தின் உரிமையாளர் என்றும், கடவுளால் நியமிக்கப்பட்டவர் என்றும் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டியூடெர்டேவின் நீண்டகால நண்பராகவும் இவர் உள்ளார்.இவர் போலி அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

தேவாலயத்தின் உறுப்பினர்கள் முறைகேடாக பெறப்பட்ட விசாக்கள் மூலம் அமெரிக்கா அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களின் பணிஅறக்கட்டளைக்கு அமெரிக்காவில் நிதி திரட்டுவதாகும். இவர்கள் கோடிக்கணக்கான பணத்தை அமெரிக்காவில் இருந்து பிலிப்பைன்ஸுக்கு கடத்தி வந்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிரியார் அப்போலோ குயிபோலாய் மீதுஅமெரிக்காவில் வழக்கு உள்ளது.இந்த நிதி பாதிரியாரின் சொகுசுவாழக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு உதவியாளர்களாக 12 வயது முதல் 25 வயதுக்குஉட்பட்ட பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் பல பகுதிகளில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளனர். இவர்களின் பணி பாதிரியாரின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவது. இதனால் குழந்தைகளை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாகவும் பாதிரியார் அப்போலோ மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரை கைது செய்யும்படி பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பாதிரியார் அப்போலோ தலைமறைவானார். தேவாலய வளாகத்துக்குள் பொலிஸார் நுழைய மக்கள் தடுத்தனர். அவர் தனது தேவாலயத்தின் பாதாள அறையில் பதுங்கி இருக்கலாம் என பிலிப்பைன்ஸ் பொலிஸார் கருதினார்.

தேவாலயத்தை 2 ஆயிரம் பொலிஸார் நேற்று முன்தினம் சுற்றிவளைத்தனர். தேவாலய வளாகத்தை கண்காணிக்க ஹெலிகாப்டரிலும் பொலிஸார் வலம் வந்தனர். தெர்மல் இமேஜிங் கருவிகளுடன் தேவாலய வளாகத்துக்குள் பாதிரியார் அப்போலோவை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டனர். இறுதியாக அவரை பொலிஸார் கண்டுபிடித்து கைது செய்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை பாதிரியார் அப்போலோ மறுத்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content