ஐரோப்பா

லண்டன் – புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த எதிர்ப்பு ; ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்த பிஷப்

லண்டனில், நேற்று காலை, புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள், புலம்பெயர்ந்தோரை கொண்டு செல்லும் பேருந்தை சேதப்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்த நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக செயல்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இங்கிலாந்து திருச்சபை பிஷப் ஒருவர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

நேற்று காலை, லண்டனிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் சிலரை, மிதவைப்படகில் ஏற்றுவதற்காக பேருந்து ஒன்று வந்துள்ளது.

தகவலறிந்த உள்ளூர் மக்கள், அந்த பேருந்தை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் புலம்பெயர்ந்தோரை பேருந்தில் ஏற்றவிடாமல் தடுத்துள்ளார்கள். அத்துடன், புலம்பெயர்ந்தோரை ஏற்ற முயன்ற பேருந்தின் டயர்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளார்கள்.

Compassion for the most vulnerable': bishop thanks protesters who blocked  asylum coaches | Immigration and asylum | The Guardian

இந்த சம்பவம் பெருமளவில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், இங்கிலாந்து திருச்சபை பிஷப்பான Right Rev Rose Hudson-Wilkin, புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக செயல்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.மேலும் சமுதாயத்தில் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலிருப்பவர்களுக்கு கருணை காட்டுபவர்கள் சமுதாயத்தில் இருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய செயல் காட்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இவர் மறைந்த எலிசபெத் மகாராணியின் chaplain ஆகவும், நாடாளுமன்ற கீழவையின் chaplain ஆகவும் பணியாற்றியவர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content