கொழும்பில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்

பாணந்துறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
பாணந்துறை – ஹிரண பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, மோட்டார் சைக்கிளிலி் பிரவேசித்த இரண்டு அடையாளந்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்ததுடன், காயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டீ-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஹிரண பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.