வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் விஷம் கொடுத்து கொலை
வங்கதேசத்தில்(Bangladesh) இந்து சமூகத்தினர் மீதான தாக்குதலுக்கு மத்தியில், சுனம்கஞ்ச்(Sunamganj) மாவட்டத்தில் ஜாய் மகாபத்ரோ(Joy Mahapatro) என்ற இந்து நபர் கொல்லப்பட்டுள்ளார்.
ஜாய் மகாபத்ரோ உள்ளூர்வாசி ஒருவரால் தாக்கப்பட்டு விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்று குடுபத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்திற்கு பிறகு மகாபத்ரோ சில்ஹெட் எம்ஏஜி ஒஸ்மானி(Sylhet MAG Osmani) மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருட்டு சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பல் துரத்தியதில் இருந்து தப்பிக்க 25 வயது இந்து நபர் கால்வாயில் குதித்து உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தொடர்புடைய செய்தி
திருட்டு சந்தேகத்தின் பேரில் துரத்தப்பட்ட வங்கதேச இந்து நபர் கால்வாயில் குதித்து மரணம்




