ஆசியா

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மற்றுமொரு கட்டணம்!

சிங்கப்பூரில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வீடுகளிலிருந்து குப்பைகளை அகற்றுவதற்கான கட்டணம் உயரவிருக்கிறது.

பொதுக் கழிவுச் சேகரிப்புத் திட்டத்தில் கழக, தனியார் அடுக்குமாடி வீடுகளுக்கான கட்டணம் 39 காசு உயர்ந்து 10 வெள்ளி 20 காசாகும். தரை வீடுகளுக்கான கட்டணம் ஒரு வெள்ளி 33 காசு கூடி 34 வெள்ளியாகும்.

சிங்கப்பூரின் ஒட்டுமொத்தக் கழிவு நிர்வாக முறை நீண்டகாலம் சீராய்ச் செயல்படுவதைக் கட்டண உயர்வு உறுதி செய்யும்.

நிரந்தரப் பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டு, உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின் U-SAVE பற்றுச்சீட்டு ஆகியன கழக வீடுகளில் வசிப்போர் கட்டண உயர்வைச் சமாளிக்க உதவும்.

வீடுகளிலிருந்து குப்பை சேகரிப்பதற்கான கட்டணம் ஈராண்டுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படுகிறது.

நடைமுறைச் செலவு, ஊழியர் சம்பளம் ஆகியவற்றால் கடந்த சில ஆண்டுகளில் சராசரி பொதுக் குப்பைச் சேகரிப்புக் கட்டணம் உயர்ந்திருக்கிறது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!