ஐரோப்பா

பிரித்தானியாவில் 999 என்ற அவசர தொலைப்பேசி சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவிப்பு!

பிரித்தானியாவில் மனநலப் பாதிப்பினால் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து அறிவிக்க பயன்படுத்தப்படும் 999 என்ற தொலைப்பேசி அழைப்பை நிறுத்த போவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதன்படி வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த சேவையை பெற முடியாது எனக் கூறப்படுகிறது.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வரை அதிகாரிகள் அனுப்பப்பட மாட்டார்கள் என்று ஆணையர் சர் மார்க் ரோவ்லி சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புச் சேவைகளிடம் கூறியுள்ளார்.

நிபுணத்துவ மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களைக் கையாள்வதைக் காட்டிலும் குற்றம் மற்றும் அதில் பாதிக்கப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்த காவல்துறையை அனுமதிக்கும் வகையில் இந்த சேவை நிறுத்தப்பட்டவுள்ளதாக கூறப்படுகிறது.

“உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இருந்தால், அதிகாரிகள் தொடர்ந்து பதிலளிப்பார்கள்” என்று மெட் போலீஸ் தி கார்டியன் செய்தி சேவையிடம் கூறியுள்ளார்.

“சுகாதார சேவைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதில் முதன்மையாக இருக்க வேண்டும், குற்றங்களைத் தடுப்பதற்கும் கண்டறிவதற்கும், சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அதிகாரிகள் தங்கள் முக்கியப் பொறுப்புகளில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும்  மனநல தொண்டு நிறுவனமான மைண்ட், இந்த நடவடிக்கை குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!