இலங்கை செய்தி

இலங்கை அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கை அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த நாடு தற்போது முன்னேற்றமடைந்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடு என்ற ரீதியில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் இதற்காக தொழிற்சங்க அமைப்புகளையும் காலத்திற்கேற்ற வகையில் மாற்றங்களுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்கு அரசியல் ரீதியான நியமனங்களினூடாக பணிப்பாளர் சபை நியமிக்கப்படுவதைத் தடுப்பதற்காக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

உரிய திட்டங்களினூடாக நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச்செய்யத் தவறும்பட்சத்தில், நாட்டிற்கு எதிர்காலமொன்று காணப்படாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content