இலங்கை

நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து நாளை (மார்ச் 5) நடைபெறவிருந்த நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த அடையாள வேலை நிறுத்தத்தை இடைநிறுத்துவதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட GMOA, தமது கோரிக்கைகள் மீதான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்கு கால அவகாசம் வழங்கி வேலைநிறுத்தம் மார்ச் 21 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

மருத்துவர்களின் கொடுப்பனவுகளை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து மார்ச் 5 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை GMOA நேற்று அறிவித்தது.

2025 வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் கணிசமான குறைப்புக்கள் உள்ளதாகவும், இது மருத்துவ நிபுணர்களை பாதிக்கும் என்றும் GMOA தெரிவித்துள்ளது.

(Visited 20 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content