இலங்கை

களுத்துறை சிறுமி மரணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

களுத்துறை நகரில் உள்ள விடுதி ஒன்றில் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.

களுத்துறை தெற்கிலுள்ள விடுதியொன்றின் மாடியில் இருந்து தவறி விழுந்த குறித்த சிறுமி கடந்த 6ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்த மர்ம மரணம் தொடர்பாக, சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் 29 வயதுடைய திருமணமான இளைஞர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியை அழைத்துச் செல்ல உதவியதாகக் கூறப்படும் இளைஞனும், யுவதியொருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடுதியில் தங்க வைப்பதற்கு முன்னர், சிறுமியின் தேசிய அடையாள அட்டையை சரிபார்க்கத் தவறியதன் காரணமாக அந்த விடுதியின் உரிமையாளரின் மனைவி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில்,பொலிஸ் அதிபர் சி. டி. விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்