ஆசியா

மலேசியாவில் விபத்தைப் படமெடுத்தபோது கார் மோதி முதியவர் மரணம்!

நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தை முதியவர் ஒருவர் படமெடுத்துக்கொண்டிருந்தபோது அவர் மீது கார் மோதியதில் உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள இஸ்கந்தர் சுல்தான் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) நிகழ்ந்தது.

விபத்தில் சிக்கிய வாகனத்தைத் தவிர்க்க கார் ஓட்டுநர் முற்பட்டபோது அந்த 68 வயது நபர் மீது மோதியதாக ஜோகூர் பாரு காவல்துறையின் உதவி ஆணையர் பல்வீர் சிங் கூறினார்.

“முதியர் மீது கார் மோதியதற்கு முன்பாக, ஒன்னொரு கார் கட்டுப்பாடு இழந்து சாலைத் தடுப்பு மீது மோதியது,” என்று சிங் தெரிவித்தார்.

அந்த விபத்துக்குள்ளான காரை முதியவர் படமெடுத்துக்கொண்டிருந்ததாகவும் அப்போது அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த இன்னொரு கார் அவர் மீது மோதியதாகவும் உதவி ஆணையர் சிங் கூறினார்.

இந்தச் சம்பவம் காலை 6.40 மணி அளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

முதியவருக்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் திரு சிங் கூறினார்.ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்ததாக அவர் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!