இலங்கை

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த விபத்து

புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் 19 அன்றைய தினம் இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பந்தன் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் பரந்தன் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியதில் பரந்தன் உமையாள்புரம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் நகுலேஸ்வரன் 47 வயதுடைய நபர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி நேற்று (20) உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

கைது செய்யப்பட்ட வாகனத்தின் சாரதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 23 திகதி வரை விளக்மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் உடலம் யாழ் போதனா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content