தமிழ்நாடு

தமிழகத்தில் ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த விபரீதம்!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே முதியவர் ப்ளூடூத் ஹெட்போன் அ ணிந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது, ஹெட்போன் திடீரென வெடித்ததில் முதியவர் காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ளது மாத்துக்கண்மாய் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பன்னீர்செல்வம் (55).இவர், நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டில் ப்ளூடூத் ஹெட்போன் அணிந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென ப்ளூடூத் ஹெட்போன் வெடித்துச் சிதறி, முதியவர் பன்னீர்செல்வம் காது பகுதியில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி முதியவர் பன்னீர்செல்வத்தை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content