இலங்கையை கட்டியெழுப்ப அமெரிக்கா முழு ஆதரவு!
“ இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகவே இருக்கின்றது.”
இவ்வாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் தெரிவித்தார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போதே அலிசன் ஹூக்கர் மேற்கண்டவாறு கூறினார்.
அனர்த்தத்தினால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தனது இரங்கலை அலிசன் ஹூக்கர் தெரிவித்தார்.
” நெருக்கடியான நேரத்தில் பல்வேறு நிவாரண மற்றும் நிவாரணக் குழுக்களை இலங்கைக்கு அனுப்புவதில் அமெரிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் அளித்த ஆதரவிற்கு ஜனாதிபதி அநுர நன்றி தெரிவித்தார்.
அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளும் இலங்கைக்கு அளித்த மனப்பூர்வமான ஆதரவை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.
” நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி பொருளாதார குறிகாட்டிகளை உயர்த்தி வரும் நிலையிலே இலங்கைக்கு இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டது.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் நீண்டகால அடிப்படையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் எதிர்காலத்தில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“ தீர்வை வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்துகின்றது.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறை மேம்படுத்தப்படும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு ஆதரவளிக்கப்படும்.” என்று துணை இராஜாங்கச் செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் குறிப்பிட்டார்.





