இலங்கை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு!

கடந்த பாராளுமுன்ற தேர்தலின்போது 30வருட அபிவிருத்தி திட்ட முன்மொழிவினை கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் ஒரு செங்கல்லை கூட களுவாஞ்சிகுடி பகுதியில் நடமாடமுடியாத நிலையில் தாங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை குழப்ப முனைவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச அமைப்பாளர் யோகநாதன் லிபியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று (10.12)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அண்மையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதி புனரமைப்பு பணியின்போது முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் சாணக்கியனின் ஆதரவாளருமான வினோராஜ் என்பவரினால் தாங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது பொய்யான கருத்துகளை வெளியிட்டுவருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கமுடியாத நிலையில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனால் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை குழப்புவதற்கு முனைவதாகவும் குற்றச்சாட்டுகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!