இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

எயார் இந்தியா விபத்து – விமானி தொடர்பில் வெளிவரும் தகவல்

இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளான எயார் இந்தியா விமானத்தை இயக்கிய விமானி சில மாதங்களில் வேலையிலிருந்து ஓய்வுபெறவிருந்தார் என தெரியவந்துள்ளது.

அனுபவசாலியான 60 வயது கேப்டன் சுமீத் சபர்வால் 82 வயதுத் தந்தையுடன் கூடுதல் நேரம் செலவழிக்க எண்ணியிருந்தது.

வேலைக்குச் செல்லும்போதெல்லாம் தந்தையைக் கவனித்துக் கொள்ளும்படி அவர் சொல்லிவிட்டுச் செல்வார். இப்போது தந்தையின் நிலை என்ன? என விமானியின் அண்டைவீட்டுக்காரர் தெரிவித்துள்ளார்.

கிளைவ் குந்தர் என்பவர் விமானப் பயணத்தில் விமானி சக விமானியாக செயற்பட்டுள்ளார்.

குந்தரின் சகோதரியும் பெற்றோரும் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். அவரின் தாயார் முன்பு விமானச் சிப்பந்தியாகப் பணியாற்றியவர்.

நேற்று முன்தினம் லண்டனுக்கு விமானம் புறப்பட்டபோது கேப்டன் சபர்வால் சில நொடிகளுக்குள் “mayday call” என்கிற அவசர உதவிக்கான அழைப்பை விடுத்தார்.

விமானம் பின்னர் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 242 பேரில் ஒருவர் மட்டும் உயிர்தப்பியதாகக் கூறப்படுகிறது.

(Visited 88 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே